Monday, October 13, 2014

யோகா என்றால் என்ன?


மனிதகுலம் நல்ல உடல் நலத்தோடும், மனவளத்தோடும் வாழ்ந்து, பிறவிப்பயனை (மரணமில்லா பெருவாழ்வு, மீண்டும் பிறவா நிலை) எய்துவதற்காக சித்தா்கள் மற்றும் ஞானியா்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த யோகா (அ) யோகம்.

யோகம் என்றால் உடலும் மனமும் லயம் ஆதல் ஆகும்.

லயமாதல் என்றால் இணைதல் ஆகும்.   உடலும் மனதும் இணைந்து செய்யப்படுகின்ற பயிற்சியே யோகசனப்பயிற்சிகள் ஆகும்.

இவைகள் முறையாக குரு மூலம் கற்றுக்கொள்வது மிகவும் சாலச்சிறந்தது.

ஏன் இந்த யோகப்பயிற்சிகள் செய்யவேண்டுமென்றால், அதீத விஞ்ஞான வளா்ச்சி கண்ட இந்த விஞ்ஞான யுகத்தில் உடலுக்கு உழைப்பு என்பது மிக மிக குறைந்துவிட்டது.

நோய்கள் எல்லாம் உள்ளே புகுந்து ஆட்டம்போட ஆரம்பித்துவிட்டன.  இதனால் அந்நோய்களின் மூலம் நாம் பல வகைகளில் மருத்துவரிடம் பணத்தை இழந்துகொண்டு இருக்கிறோம்.

நோய்கள் நமது உடலினுள் வரவிடாமல் தடுக்கவும், வந்த நோய்களை விரட்டவும் ஆரோக்கியமான மற்றும் ஊனமற்ற குழந்தைகளை இந்த சமுதாயத்திற்கு வழங்கவும், மற்றும் மனித ஆயுள் முழுமை 120 ஆண்டுகள் வாழவும் இந்த யோகப்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியப்படுகின்றன.

ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள், தற்பொழுது மனித ஆயுள் 60 -70 ஆக உள்ளது. இதையும் மீறி வாழும் மனிதர்களை மக்கள்  கண்டால் ஆச்சா்யமாக பார்க்கின்றனா்.

இதனை மாற்ற யோகசன பயிற்சியால் மட்டுமே முடியும்.

யோகசனங்களில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட ஆசனங்கள் உள்ளன.  அவைகளை நன்கு வடிகட்டி (இந்த வேகமான உலகில் ஈடுகொடுக்கவும், செம்மையாகவும் வாழவும்) வெறும் 35 ஆசனங்கள் மட்டும் செய்தால் போதுமானது.

அந்த 35 ஆசனங்களில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி, மருத்துவா்களால் கைவிடப்பட்ட (கேன்சா், மூட்டுவலி, உடல் பருமன், ஆண்மையின்மை, விந்து நீா்த்துபோதல், ஆஸ்துமா மற்றும் பல......) நோய்களை குணப்படுத்தலாம்.


நன்றி,

என்றும் அன்புடன்,

J.S. ராஜகோபாலாசாரி (ராஜாஜி),
கரூா்.
அலைபேசி: 9629649941
E-mail: rajajijsr@gmail.com

Sunday, October 12, 2014

முஷ்டிமைதுனம் (கைப்பழக்கம்) சுய இன்பத்தை தவிா்க்க, மறக்க செய்ய வேண்டியவைகள்

வணக்கம் நண்பா்களே!!!

    முஷ்டிமைதுனத்தை (கைப்பழக்கம்) த்தை தவிா்ப்பது, மறப்பது என்பது எளிதான விசயம் அல்ல, இருந்தாலும் நம்முடைய ஞானிகள், சித்தா்கள் கற்றுத்தந்த எளிய செயல்முறைகளின் (பயிற்சிகள்) பின்பற்றுவதன்  மூலம் அதனை முழுமையாக மாற்றுவதற்கு சாத்தியம் அதிகம்.

அவைகள் என்ன என்ன என்பதை பின்வருமாறு காணலாம்,


  1. தினமும் உணவு உண்ட பாத்திரங்களை கழுவி சுத்தமாக வைப்பதைப்போல்,
    இந்த உடலையும், மனதையும் சுத்தமாக கழுவி வைக்கவேண்டும் 

அது எவ்வாறு? எனில்,

யோகசன பயிற்சிகள் மற்றும் தவம் மூலமே நமது உடலையும், மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள இயலும்.

”மனம் ஒரு விளை நிலம், அதில் எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்”

தவறுசெய்யமாட்டேன் (கைப்பழக்கம்) என்ற எண்ணத்தை அடிக்கடி நினைத்துக்கொண்டே இருந்தால் அது செயலுக்கு வந்துவிடும்.

எண்ணம், சொல், செயலில் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இரவு உறங்கும்போது மல்லாந்து (விட்டத்தை பார்த்து உறங்குதல்) படுக்கக் கூடாது, நம்முடைய உடலை இடதுபக்கமாக ஒருக்கழித்து மட்டுமே படுக்க வேண்டும்.

கூடியமட்டும் தனியாக உறங்குவதை தவிர்க்கவும்.

இரவு நேரத்தில் , ஜட்டி + அரைகல் டிரவுசா் அணிந்து உறங்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரவு உறங்குவதற்கு முன்பு 5 நிமிடம் சுகாசனத்தில் அமர்ந்து (படத்தில் காட்டியவாறு)


முதுகுதண்டின் அடியில் மனதை செலுத்தி பின்னா் உறங்கச் செல்ல வேண்டும்.

உணவில் உப்பு, புளி, காரத்தை கண்டிப்பாக 60 சதவீதம் குறைத்தே ஆக வேண்டும்.


”இனி எப்போதும் இந்த வரிகளை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்”

விந்து என்பது உடலையும், மனதையும் கட்டுப்படுத்தும் ஒரு அருமருந்து போன்றது,

அதனை( விந்துவை)  நம் உடலிலேயே தங்க வைத்துக்கொள்ளுவதனால் ஏற்படும் பயன்களை அதிகமாக அனுபவிக்கலாம்.

இனி விந்து உடலைவிட்டு வெளியேறினால் அது குழந்தை பிறப்பிற்காக மட்டுமே தவிர மற்ற எந்த ஒரு செயல்பாட்டிற்கும் அதனை தவறாக வெளியேற்றக்கூடாது. (இயற்கையாக தூங்கும்போது விந்து வெளியேறுவது நீங்கலாக)

மலமும், சிறுநீரும் போன்றது தான் விந்துவும் ஒரு கழிவு பொருள் தான் அதனை கட்டுப்பாடற்ற முறையில் உருவாகிறது என்பதற்காக அதனை மனம் போனபோக்கில் வெளியேற்றுவதினால் இன்பத்தினை பெறுதற்குப் பதிலாக துன்பத்தை பெற நேரிடும்.


அடுத்த பதிவில் முஷ்டி மைதுனம் (கைப்பழக்கம்) தவிா்க்க என்ன என்ன செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம்.



தாங்கள் படித்ததை தங்களது நண்பா்களிடமும் இந்த தளத்தை பகிா்ந்து கொள்ளவும்.


நன்றி,

என்றும் அன்புடன்,

J.S. ராஜகோபாலாசாரி (ராஜாஜி),
கரூா்.
அலைபேசி: 9629649941
E-mail: rajajijsr@gmail.com


முஷ்டிமைதுனம் (கைப்பழக்கம்), சுய இன்பம்

வணக்கம் நண்பா்களே!!!

கைப்பழக்கம் என்பது என்ன? 

எல்லா ஆண்களுக்கும் இந்த கோள்விக்கு பதில் தெரியும்,

ஆனால் அதன் விளைவாய் ஏற்படுவது என்ன என்பது எத்துனை போர்களுக்கு தெரியும்?

  1. உடம்பிலிருந்து விந்துவை (கைப்பழக்கத்தின் மூலமோ, அல்லது ஒரு நாளைக்கு அதிகமான உடல் உறவு மூலமோ) வெளியேறினால் அறிவும் மனமும் திறன்படி இயங்காது.
  2. உடலில் எப்பொழுதும் ஒருவித சோர்வு இருந்துகொண்டே இருக்கும்.
  3. அந்த சோர்வை சரிசெய்ய மனம் போதை பழக்கத்திற்கு தள்ளிவிடுகிறது.
  • சிகரெட்
  • மது அருந்துதல்
  • கஞ்சா, அபீன்,ஹான்ஸ...... மற்றும் பல
  1.  உடல் வேறு அல்ல, விந்து வேறு அல்ல. விந்துவால் உடல் ஆனது, அந்த உடலால் விந்து ஆனது.
  2. விந்து இருப்பு அதிகமானல் உடலும், மனமும் சாந்தமாக இருக்கும் அறிவு திறன்படி இயங்கும்.
  3. விந்து இருப்பு குறைந்தால் உடலும், மனமும் சாந்தமாக இருக்காது மனம் எப்பொழுதும் பதட்டமாகவே இருக்கும், ஆபத்தில் சிக்கிகொள்ள இயலும்
  4. இந்த கேவலமான செயல்பாட்டினால் நம்மிடம் உள்ள திறமைகளை அனைத்தையும் நானே குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானது.
தத்துவம்:

முன்னோர்களான நமது சித்தா்கள் மற்றும் ஞான புருசா்கள் பலா் விந்துவைப்பற்றியும், உடலைப்பற்றியும் வழங்கிய தத்துவ முத்துக்கள்.

”விந்து விட்டவன் நொந்து கெட்டான்”

”உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை 
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார், மேனியும் சிவந்திடும், 
அருள் தரித்த அம்மைபாதம், ஐயன்பாதம் உண்மையே”
                                                                                                                  -சிவவாக்கியா்

உடம்பால் அழியின் உயிரால் அழிவா்,
திடம்பட மெய் ஞானம் சேரவும் மாட்டார்,
உடம்பை வளா்க்கும் உபாயம் அறிந்தேன்,
உடல் வளா்த்தேனே, உயிா் வளா்த்தேனே.
                                                                                   -திருமந்திரம் (724)

செயலிலே விளைவாக இயற்கை ஒழுங்கு அமைப்பு இருக்க 
தவறு இழைத்து பின், பரமனை வேண்டி என்ன பயன்,
                                                                                      - வேதாத்திரி மகரிஷி



Saturday, October 11, 2014

என்னை பற்றி

     அன்புள்ள இணையதள வாசகா்களுக்கு வணக்கம்!!!



என்னுடைய பெயா் J.S. ராஜகோபாலாசாரி (ராஜாஜி).   நான் தற்பொழுது கரூா் மாவட்டம், தமிழ்நாட்டில வசித்து வருகிறேன். 

     என்னுடைய வயது 39. எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. 

நான் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கெண்ட தேடுதல் மற்றும் பயிற்சியின் மூலமாக என்னுள் எழுந்த கோள்விகளுக்கு நானே விடை காண்டுள்ளேன்.  அது என்ன என்றால்,,,,

 மனிதன் ஏன் துன்பப்படுகிறான், இல்லர வாழ்வில் பலகீனமாகவும், முழு திருப்தி இல்லாமலும், சொல்லும் செயலும் வெவ்வேறாக அமைகின்றது என்று வருந்துவது, இதற்கெல்லாம் என்ன காரணம்?

இவற்றுக்கெல்லாம் விடை ஒன்றுதான்,
    
     நாம் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, நம்மை நாம் இழந்துகொண்டு இருக்கிறோம். 

     மனம் அறிவினுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல், மனதின் கட்டுப்பட்டிலேயே இயங்கிக்கொண்டு இருக்கிறது நம்முடைய அறிவு. 

   உதாரணமாக:
              ஒருவா் நம்மை கோவப்படுத்திகிறார், அவமானப்படுத்திகிறார் பலா் முன்னிலையில் உங்களை, 
             மனம் சொல்கிறது அவனை தாக்கு என்று,
            ஆனால் உங்கள மனமோ.... அவ்வாறு செய்யாதே அவனை மன்னித்துவிட்டு, அந்த இடத்தினை விட்டு அகன்றுவிடு என்று,

ஆனால் உண்மையில் என்ன நடக்கும்,,,,,?????

          உங்கள் பதில் சரியானது, மனம் சொன்ன பாதையிலே நீங்கள் பயணித்து விட்டீா்கள்.  கோவப்பட்டு அவரை தாக்கியும், தகாத வார்த்தையில் அவரை திட்டியும்விட்டீா்கள்.  

  இந்த நடைமுறையை மாற்றி அமைப்பதற்கு என்ன வழி?

என்ன செய்வதன் மூலம் எவ்வாறு நம் மனதை நம்முடைய வேலைக்காரனாக மாற்ற முடியும்????

பதில் ஒன்றுதான்....

 அது 

யோகசன பயிற்சிகள், மற்றும் தவம் மூலம் மட்டுமே சாத்தியம்.


யோகசன பயிற்சிகள் செய்வதன் மூலம் எப்படி இதை மாற்றமுடியும், சாத்தியமா?


சாத்தியமே......


இனிவரும் நாட்களில் என்னுடைய பதிவுகளின் மூலம் இதற்கான முழு விளக்கத்தினை தங்களுக்கு தர முயல்கிறேன்....


பின் தொடருங்கள்.... பயனடையுங்கள்.....


என்றும் 

இறையுணா்வுடன்

J.S. ராஜகோபாலாசாரி (ராஜாஜி)
அலைபேசி: 9629649941