Friday, November 20, 2015

கோபம் என்றால

பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”
அப்பா ஒருகணம் யோசித்தார்.

“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.

மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.

“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.

“சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.

“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”

போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.

“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.

“டேய்… அறிவு கெட்டவனே… மடப்பயலே ...
நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? முண்டம்....அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம்... மவன...நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன்.... பாத்துக்க… வைடா போனை…!”

மகன் அப்பாவிடம் சொன்னான்.

“அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...

... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

.

.

.

.

.

.

.

.

.

.
.

“ஹலோ… நான் ராமசாமி பேசறேன்.
உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”

Have a nice and Anger free day....

Thursday, January 1, 2015

பயிற்சி திட்டம்

வணக்கம்,  அன்பர்களே!!!!

ஆசனப்பயிற்சிகள் செய்வற்கு முன்பு உடலை தயார்படுத்துதல் அவசியம் (Preparatory Excercises is must) 

சூரிய நமஸ்காரம் - 3 செட்

அல்லது

காயகல்ப பயிற்சி ( காலை அல்லது மாலை) முறைகள் ஏதேனும் ஒன்று



அல்லது

நாடிசுத்தி ( 10 சுற்றுகள்)



அல்லது

எளியமுறை உடற்பயிற்சிகளில் நின்ற நிலையில் செய்யப்படும் பயிற்சிகள் அனைத்தும். (Simplified Physical Excercise Designed by Vethathiri Maharishi)


அல்லது

சாதாரண நடைப்பயிற்சி ( 5 நிமிடங்கள் )



அல்லது

விவேகானந்தர் அருளிய 1:4:2 (பிராணயாம பயிற்சி)




மேற்கூறியவைகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் செய்து யோகசன பயிற்சி திட்டத்தினை மேற்கொண்டால் நல்ல பலன் கிட்டும்.


கீழ்க்கண்ட திட்டத்தினை கடைபிடித்தால், விந்து கெட்டிபடுதல், விந்து இருப்பும், அளவும் பெருக்குதல், தாம்பத்தியம் (உடலுறு கொள்ளும்போது) அதிக நேரம் முழு திருப்தியுடன் உங்கள் துணையை மகிழ்விக்கலாம்.


வ.எண் ஆசனத்தின் பெயா் நிற்க வேண்டிய நேரம் தடவைகள் நிமிடங்கள்
1 சலபாசனம் 30 வினாடிகள் 3முறை 3நிமிடங்கள் (ஒய்வு உட்பட)
2 பச்சிமோத்தாசனம் 30 வினாடிகள் 3முறை 3 நிமிடங்கள் (ஓய்வு உட்பட)
3 ஹாலாசனம் 15 வினாடிகள் 3 முறை 3 நிமிடங்கள் (ஓய்வு உட்பட)
4 சர்வாங்காசனம் 3 நிமிடம் 1 முறை 3 நிமிடங்கள் (ஓய்வு உட்பட)
5 மச்சாசனம் (அ) சக்கராசனம் 30 வினாடிகள் 1 முறை 1 நிமிடம் (ஓய்வு உட்பட)
6 சிரசாசனம்  3 நிமிடம் 1 முறை 3நிமிடங்கள் (ஒய்வு உட்பட)
7 விருட்சாசனம் 1 நிமிடம் 1முறை 1நிமிடம் (இடது மற்றும் வலது உட்பட)
8 சாந்தி 5 நிமிடம் 1 முறை 5 நிமிடங்கள்
9 நாடிசுத்தி 10 ரவுண்ட் 2 நிமிடங்கள்


சலபாசனம்:


பச்சிமேத்தாசனம்:

ஹாலாசனம்

விருட்சுகாசனம்
மட்சியாசனம்
சக்ராசனம்

சர்வாங்காசனம்



சிரசாசனம்


சாந்தியாசனம்

சும்மா படுத்திருக்கும் நிலை (படத்தில் பார்க்கவும்) ( அமைதியான மூச்சை மட்டும் கவனிக்கவும்)

முக்கியமான நிபந்தனை:
 மேற்கூறிய அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வரிசைப்படியே யோகசனப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம்.
* அனைத்து ஆசனங்களையும், வீடியோவில் காட்டியவாறு மெதுவாக செய்யவேண்டும்.
* தாங்கள் சிரமாக எண்ணும் ஆசனங்களை, முடிந்தவரை முயற்சிசெய்து செய்துவரவும், நாள்பட நாள்பட அந்த ஆசனங்களை  தாங்களே மிக சரியாவும் செய்வீா்கள் என்பது உறுதி.
* ஆசனங்களின் முடிவில் சாந்தியாசனம் மற்றும் நாடிசுத்தி செய்யத்தவறும்பட்சத்தில் உடலில் ஒருவித சோர்வும், களைப்பும் ஏற்படலாம் .ஆதலால் இதனை உதாசீனம் செய்யாமல் கண்டிப்பாக செய்யவேண்டும

குணமாகும் நோய்கள்:
  • ஆண்மையின்மை (Impotency)
  • கண்பார்வை கோளாருகள் (eye sight diseases )
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும் (Increasing Self confidence)
  • திடமான முடிவு எடுத்தல் (decision Taking posible)
  • நுரையீரல் முழுவதும் பிராணவாயு நிரம்புகிறது (whole lungs loading Oxigence)
  • மூளை சுறுசுறுப்பு அடைகிறது (Brain Functions are tunning extra)
  • திருமணத்திற்கு பின்பு ஆண்குறி விரைப்பு மற்றும் நீடிக்கும் தன்மைக்காக மாத்திரை பயன்படுத்தும் அவசியம் இல்லை. (After Marriage no medicines are not required to full fill your intercourse sufficiency)
  • ஆரோக்கியமான குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகம்.


தங்களுக்கு ஏற்படும் சந்தேகம் மற்றும் யோக, பிராணயாமம் செய்யும் முறைகள் குறித்த ஐயங்களுக்கு என்னை தொடா்பு கொள்ளலாம்

செல்:+91- 98438-43073 (Evening 6 - 8)